search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோந்து கப்பல்"

    • ராமேசுவரத்தில் இருந்து மட்டும் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
    • மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டுள்ள பகுதியாகும். இதில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் மீன்பிடி தொழிலில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த துறைமுகம் மூலமாக தினமும் மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் என சுமார் 1 லட்சம் பேர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

    மேலும் நாள்தோறும் ரூ.5 கோடி வரை வர்த்தகமும் நடைபெறுகிறது. இங்கு மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் அதிக அளவில் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து மட்டும் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக இந்த மீன்பிடி தொழில் இருந்து வருகிறது.

    இதற்கிடையே, ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி தொழில் கச்சத்தீவை சார்ந்த பகுதியை நம்பியே உள்ளது. வாரத்திற்கு மூன்று நாட்கள் என மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்றால் பெரிய விசைப்படகுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். சிறிய படகுகள் என்றால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் செலவு செய்ய வேண்டும்.

    மீனவர்கள் பிடித்து வரும் இறால், மீன், கணவாய், நண்டு, மற்ற மீன்களுக்கு அதிகளவில் வருவாய் கிடைத்தால் மட் டுமே தொடர்ந்து கட லுக்கு மீன்பிக்க செல்ல முடியும். ஆனால் சமீப காலமாக தொடர்ந்து இலங்கை கடற்படையின் தாக்குதல், விரட்டியடிப்பு மற்றும் கைது செய்யப்படும் நடவடிக்கை உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் கச்சத்தீவு அருகே கடற்படை கப்பல் களை சுற்றி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து படகுகளை இயக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×